இஸ்ரோ முதல்முறையாக இதுவரை யாரும் நெருங்கா சூரியனுக்கு மிகவிரைவில் அனுப்பவிருக்கும்
ஆதித்தியா L1 விண்கலம் பற்றி தான் பார்க்க போறோம்.
இந்த ஆதித்யாL1 வின்கலம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அதாவது பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒளி வட்ட பாதையில் சுற்றி வர இருப்பதால் 24 மணி நேரமும் ஒருபக்கம் சூரியனை பார்த்தபடியும் மற்றொரு பக்கம் செய்தி தொடர்புக்காக பூமியையும் பார்த்தபடியும் இருக்கும்.
தற்போது இந்தியாவில் நிலவுகிற பருவநிலை மாற்றங்களை குறித்து இதன் முன் இஸ்ரோவால்
அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களை வைத்து முன்னெச்சரிக்கையாக எப்படி கூற முடிகின்றதோ
உதாரணத்திற்கு கஜா புயல் வருவதன் முன்
அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து
எப்படி உயிர் சேதங்களை தடுக்க முடிந்ததோ அதை விட மிக மிக துல்லியமாக
இந்த ஆதித்யா l1ன்னால் கணித்து கூற முடியும்.
மேலும் சூரியனில் வரும் பாதிப்புகளை வைத்து
அதனால் நமக்கு என்ன பாதிப்பு நிகழும் என்பதை கூறமுடியும் அதுமட்டுமல்லாமல் இஸ்ரோவால்
இதற்கு முன் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த ஆதித்யா l1 இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா விண்கலம் மூலமாக
சூரியனை பற்றி முற்றிலும் ஆராய்வதற்கும், சூரியனைப்பற்றி அறிவியல் ரீதியாக அறிந்து கொள்வதற்கும்
சூரியனில் நிலவும் வெப்ப நிலை,
சூரியனால் ஏற்படும் கதிர்வீச்சு,
சூரியன் மற்றும் விண்வெளியில் நிகழும்
பருவநிலை மாற்றங்கள் காரணமாக
நம் பூமியில் ஏற்படும் மாற்றங்கள்
அதன்மூலமாக ஏற்படும் விளைவுகள்
குறித்து ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா L1
எவ்வித தடையுமின்றி அதன் இலக்கை அடைய வாழ்த்துகிறோம்.
எவ்வித தடையுமின்றி அதன் இலக்கை அடைய வாழ்த்துகிறோம்.
Comments
Post a Comment